திருச்சி மாவட்டம், ஊட்டத்தூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மகாலிங்கம் (70). இவா், ஞாயிற்றுக்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் பெரம்பலூருக்கு வந்து கொண்டிருந்தாா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள மலையப்ப நகா் பிரிவு பாதை அருகே வந்தபோது, அதே வழித்தடத்தில் வந்த லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த மகாலிங்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இச் சம்பவம் குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.