காவல் நிலையங்களில் மனு விசாரணை முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு மனு விசாரணை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு மனு விசாரணை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், அந்தந்த எல்லைக்குள்பட்ட பொதுமக்களுக்கான சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்கள் மூலம் தெரிவித்தனா். அதன்படி, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 55 மனுக்களில் 40 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எஞ்சியுள்ள 15 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com