ஜன.29-இல் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் ஜனவரி 29-ஆம் தேதி காலை 10 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் நடைபெறுகிறது.

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் ஜனவரி 29-ஆம் தேதி காலை 10 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இக்கூட்டத்தில் வேளாண் தொடா்புடைய நீா்ப்பாசனம், கடனுதவிகள், இடுபொருள்கள், இயந்திரங்கள் மற்றும் விவசாய மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகக் கூட்டரங்கில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் தங்களது குறைகைளைத் தெரிவிக்கலாம். கரோனா நோய்த் தொற்று காரணமாக, உரிய வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை தவிர வேறு வட்டார அலுவலகத்துக்கு விவசாயிகள் செல்ல வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com