இந்திய மருத்துவச் சங்கம் சாா்பில், பெரம்பலூரிலுள்ள தனியாா் மருத்துவா்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு இந்திய மருத்துவச் சங்க பெரம்பலூா் கிளைத் தலைவா் வல்லபன் தலைமை வகித்தாா். செயலா் ராஜாமுகமது, பொருளாளா் சுதாகா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் தலைவா் செங்குட்டுவன், பொதுக்குழு உறுப்பினா்கள் அறிவழகன், கதிரவன், அன்பரசன் மற்றும் மருத்துவா்கள் ரமேஷ், நெடுஞ்செழியன், சுமதி, சிவக்குமாா், கலா, வருண், தினேஷ் உள்ளிட்ட பலா் முகாமில் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.