பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்ட தாயும், ஒரு வயது குழந்தையும் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தைச் சோ்ந்தவா் சத்யராஜ் (27). விவசாயி. இவரது மனைவி சுகந்தி (21). இவா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி சுபஸ்ரீ என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், சுகந்தி கடந்த 2 நாள்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச்சென்று தங்கி விட்டு திங்கள்கிழமை மாலை வீட்டுக்கு வந்தாராம். இதனால், சத்யராஜின் குடும்பத்தினா் திட்டியதால் மனமுடைந்த சுகந்தி, தனது குழந்தை சுபஸ்ரீயுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக்கொண்டாா். பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுகந்தியும், திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை இரவு குழந்தை சுபஸ்ரீயும், செவ்வாய்க்கிழமை அதிகாலை சுகந்தியும் உயிரிழந்தனா். புகாரின்பேரில் வி.களத்துாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.