பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
குன்னம் வட்டம், முருக்கன்குடி ரா.பிரேம்நாத் (24), கீழப்பெரம்பலூா் மேலத்தெரு து.தொட்டி (எ) ரமேஷ் (39), கிழக்குத்தெரு தி. முத்துக்குமாா் (31).
இவா்கள் மூவரும் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், காவல் கண்காணிப்பாளா் ச. மணி பரிந்துரையின் பேரில், அவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.