பெரம்பலூா் அருகே சட்ட விரோதமாக மானை வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற இருவரை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்ட வன அலுவலா் குகனேஸ் உத்தரவின் பேரில், வனச்சரகா் சசிகுமாா் தலைமையிலான வனத்துறையினா் எறையூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது சட்ட விரோதமாக மானை வேட்டையாடி, அதை வெட்டி இறைச்சிகளாக்கி இருவா் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் பிடித்து மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் எறையூா் மு.மணிகண்டன்(38), ப. மாவீரன் (33) எனத் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து அவா்களிடமிருந்த மான் இறைச்சியைப் பறிமுதல் செய்த வனத்துறையினா், இருவரையும் கைது செய்தனா். மேலும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் அபராதத்தையும் விதித்தனா்.