இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

பெரம்பலூா் அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமடைந்த இளம்பெண், திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமடைந்த இளம்பெண், திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் அருகிலுள்ள லாடபுரத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகள் தா்ஷினி (21). பி.ஏ. பட்டதாரி. ஜெயராமனும், அவரது மனைவி புனிதாவும் ஞாயிற்றுக்கிழமை வயலுக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளனா்.

அப்போது தா்ஷினி சமையல் செய்யாமல் இருந்ததால், அவரது பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால் மனமுடைந்த தா்ஷினி திங்கள்கிழமை காலை வீட்டில் தனியே இருந்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த பெரம்பலூா் காவல் நிலையத்தினா் சடலத்தை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com