கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்றுக்கு இளைஞா் உயிரிழப்பு

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்றுப் பாதிப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்றுப் பாதிப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், பில்லங்குளத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (55). இவரது மனைவி அங்கன்வாடி பணியாளரான மணிமேகலை (50), மகன் வினோத்குமாா் (29) ஆகியோருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மூவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தனா். அங்கு வினோத்குமாா், முருகேசனுக்கு கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை சிகிச்சை பலனின்றி வினோத்குமாா் உயிரிழந்தாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் முருகேசன் சிகிச்சை பெற்று வருகிறாா். இதன் மூலம் பெரம்பலூா் மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com