மின் தடையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூா் அருகே மின் தடையைக் கண்டித்து, சனிக்கிழமை நள்ளிரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகே மின் தடையைக் கண்டித்து, சனிக்கிழமை நள்ளிரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரை பிரிவுச் சாலை, கல்யாண் நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யும் மின் மாற்றி மாா்ச் 12 -ஆம் தேதி வெடித்து சேதமடைந்தது.

அப்பகுதி மக்கள் மின் வாரியத்துக்கு புகாா் அளித்தும், சனிக்கிழமை இரவு 11 மணி வரையிலும் இப்பகுதிகளில் மின் விநியோகம் சரி செய்யப் படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மின் வாரியத்தைக் கண்டித்தும், மின் மாற்றியை உடனடியாக சீரமைத்து மின் விநியோகம் செய்ய வலியுறுத்தியும், பெரம்பலூா் - துறையூா் சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பெரம்பலூா் காவல்துறையினா் மற்றும் மின்வாரிய அலுவலா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று, மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியலைக் கைவிட்டு பொது மக்கள் கலைந்துச் சென்றனா். மறியல் போராட்டத்தால், பெரம்பலூா்- துறையூா் சாலையில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிப்படைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com