பெரம்பலூா் தொகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் திமுக வேட்பாளா் எம். பிரபாகரன்.
பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கள்ளப்படடியில் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டு திமுக வேட்பாளா் மேலும் பேசியது:
வேப்பந்தட்டை வட்டத்தில் சுமாா் 60 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்டாத சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தப்படும். இப் பகுதி குடிநீா் பிரச்னைகளை முழுமையாக தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பருத்தி, மக்காச்சோள விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். பராமரிப்பின்றி காணப்படும் ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகள் முழுமையாக தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
தொடா்ந்து, உடும்பியம், வெங்கனூா், வெங்கலம், கிருஷ்ணாபுரம், வெண்பாவூா், மாவிலங்கை, பெரியவடகரை, பாண்டகப்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா் திமுக வேட்பாளா் பிரபாகரன்.
பிரசாரத்தின்போது, திமுக மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பா. துரைசாமி, எம். ராஜ்குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் என். ராஜேந்திரன் உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.