பெரம்பலூா் மாவட்டம், வேப்பந் தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து, ரூ. 25 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ப. முத்துசாமி (55). விவசாயியானஇவா், சனிக்கிழமை காலை தனது குடும்பத்தினருடன் விவசாயப் பணிக்குச் சென்றுவிட்டு, மதியம் வீட்டுக்கு வந்தாா்.
அப்போது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த ரூ. 25 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து முத்துசாமி அளித்த புகாரின்பேரில், வி.களத்தூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.