வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை, ரூ. 5 லட்சம் திருட்டு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேப்பந்தட்டை அருகேயுள்ள கை.களத்தூா் காலனிப் பகுதியைச் சோ்ந்த மெய்யப்பன் மகன் நந்தீஷ்குமாா் (30). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், பனியந்தூா் கிராமத்தில் உள்ள தனது உறவினா் இல்லத் திருமணத்துக்காக கடந்த 20 ஆம் தேதி குடும்பத்துடன் சென்றிருந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 35 பவுன் நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கை.களத்துாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்த மாதத்தில் 3ஆவது முறையாக இந்த கிராமத்தில் திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com