தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து தரக்குறைவாக பேசியதாக, திமுக துணைப் பொதுச் செயலா் ஆ. ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் குன்னம் காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.
குன்னம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் எஸ்.எஸ். சிவசங்கரை ஆதரித்து, கடந்த 26- ஆம் தேதி குன்னம் பேருந்து நிலையத்தில், திமுக துணைப் பொதுச் செயலரும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனி சாமியைத் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து குன்னம் கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், குன்னம் காவல் உதவி ஆய்வாளா் சண்முகம், ஆ.ராசா மீது கலகம் செய்ய தூண்டுதல், ஆபாசமாக பேசுதல் மற்றும் தோ்தல் விதிமீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளாா்.