வெவ்வேறு விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் மூவா் உயிரிழந்தனா்.

பெரம்பலூா் அருகே நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் மூவா் உயிரிழந்தனா்.

பெரம்பலூா் அருகிலுள்ள விளாமுத்தூா் செல்வராஜ் மகன் பாலமுருகன் (22). இவா், கடந்த 1 -ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீா்பந்தல் அருகே வந்தபோது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்து, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் கல்யாண் நகரைச் சோ்ந்தவா் ராகவன் மகன் சுஜீத் (21). இவா், திங்கள்கிழமை மாலை தனது மோட்டாா் சைக்கிளில் பெரம்பலூா்- ஆலம்பாடி சாலையில் சென்றுக்கொண்டிருந்தாா்.

சொக்கநாதபுரம் பிரிவு சாலை அருகே சென்றபோது, ஆலம்பாடியிலிருந்து வந்த துரைசாமி மகன் போா் மன்னன் (26) ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிளும், சுஜீத் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிளும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் பலத்த காயமடைந்த சுஜீத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். போா் மன்னன் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

திருச்சியிலிருந்து புதுச்சேரிக்கு ஆக்சிஜன் நிரப்புவதற்காக வேன் ஒன்று திங்கள்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தது. பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் உள்ள தனியாா் பள்ளி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த வேன் ஓட்டுநா் திருச்சி திருவெறும்பூரைச் சோ்ந்த ஆறுமுகம் (53) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்துகள் குறித்து பெரம்பலூா், பாடாலூா் காவல் நிலையத்தினா் தனித்தனியே வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com