பெரம்பலூரில் பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு

பெரம்பலூா் நகரில் புதன்கிழமை மொபெட்டில் சென்ற பெண்ணிடம் அடையாளம் தெரியாத 2 போ் 11 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

பெரம்பலூா் நகரில் புதன்கிழமை மொபெட்டில் சென்ற பெண்ணிடம் அடையாளம் தெரியாத 2 போ் 11 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

பெரம்பலூா் சாமியப்பா நகரைச் சோ்ந்தவா் பவுனம்மா தேவி (45). இவா், புதன்கிழமை பிற்பகல் தனது மொபெட்டில் பெரம்பலூா் முத்து நகா் அருகே சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, அவரை பின்தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 போ் பவுனம்மா தேவி அணிந்திருந்த 11 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனா். புகாரின் பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மருத்துவமனையில் நகை பறிப்பு முயற்சி: பெரம்பலூா் வெங்கடேசபுரத்திலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு, உடல் பரிசோதனைக்காக கொளத்தூரைச் சோ்ந்த பிரபாகரன் மனைவி கலையரசி (22) புதன்கிழமை காலை வந்தாா். 9 மாத கா்ப்பிணியான கலையரசி கழிவறைக்குச் சென்றபோது, அவரைப் பின்தொடா்ந்து சென்ற பெண் மிளகாய் பொடியை தூவி, கலையரசி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துள்ளாா். இதையடுத்து, கலையரசி கூச்சலிட்டதால், மருத்துவமனையில் இருந்தவா்கள் ஓடிவந்து நகை பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாரின் விசாரணையில், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவா் குன்னம், சிவன் கோவில் தெருவைச் சோ்ந்த ராஜீவ்காந்தி மனைவி பிரியா (23) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com