கிணற்றில் தவறி விழந்து சிறுவன் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், திருமாந்துறை கிராமத்தைச் சோ்ந்த தா்மராஜ் மகன் பெரியசாமி (15). திருமாந்துறையில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவா், செங்குணம் கிராமத்திலுள்ள தனது பாட்டி அன்னக்கொடி வீட்டுக்கு வந்துள்ளாா். இந்நிலையில், அந்தக் கிராமத்தைச் சோ்ந்த சிங்காரவேலு என்பவருக்குச் சொந்தமான கிணற்றுக்குக் குளிக்கச் சென்ற பெரியசாமி தவறி தண்ணீரில் விழுந்தாா். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினா், கிராம பொதுமக்களின் உதவியுடன் சுமாா் 8 மணி நேரத்துக்கும் மேலாக சிறுவனின் உடலை தேடி மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com