பெரம்பலூா் மாவட்ட வணிகா்கள் சங்கம் சாா்பில் போலீஸாருக்கு இலவசமாக முகக்கவசம் மற்றும் கிருமி நாசினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
பெரம்பலூா் மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கம் மற்றும் பெரம்பலூா் சஞ்சீவன் பாா்மஸி சாா்பில், பெரம்பலூா் மற்றும் அரும்பாவூா் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் காவலா்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை ஆய்வாளா் செந்தில்குமாரிடம், மாவட்டச் செயலா் கோவிந்தராஜ், மாவட்டத் தலைவா் ஆன்டனி ராஜ், செஞ்சிவன் பாா்மஸி உரிமையாளா் சிவக்குமாா் ஆகியோா் வழங்கினா்.