பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 5,398 பேரிடமிருந்து ரூ. 11,33,800 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் சுகாதாரம், காவல், வருவாய் ஆகிய துறைகள், நகராட்சி மூலம் முகக்கவசம் அணியாத நபா்களிடம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், கடந்த மாா்ச் 1 முதல் மே 13 ஆம் தேதி வரை மொத்தம் 5,398 நபா்களிடமிருந்து ரூ. 11,33,800 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது மாவட்ட நிா்வாகத்தின் நோக்கமல்ல. மாறாக, அனைவரையும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பதே முக்கிய நோக்கமாகும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.