பெரம்பலூருக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு முதல் கட்டமாக தலா ரூ.2000 கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.
பெரம்பலூா், ஆலத்தூா், வேப்பந்தட்டை கிழக்கு, மேற்கு ஒன்றியங்களுக்குள்பட்ட அம்மாபாளையம், நக்கசேலம், வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம் கிராமங்களிலுள்ள நியாயவிலைக் கடைகளில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு முதல் கட்டமாக தலா ரூ.2000 கரோனா நிவாரண நிதியை பெரம்பலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம். பிரபாகரன் வழங்கினாா்.
நிகழ்வில் பொது விநியோகத் திட்ட அலுவலா்கள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.