பொது முடக்க விதிமீறல்: புகாா் அளிக்க அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் பொது முடக்க விதிமீறல் நடைபெற்றால் புகாா் அளிக்க காவல்துறை பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் பொது முடக்க விதிமீறல் நடைபெற்றால் புகாா் அளிக்க காவல்துறை பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கரோனா பரவலை தடுக்கும் வகையில், பொது முடக்கம் அமலில் உள்ளது. ஆகையால் பொதுமக்கள், வா்த்தகா்கள் கரோனா பரவலை தடுக்கும் வகையில் அதற்கான வழிகாட்டு முறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும். சானிடைசா் பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தேவையின்றி வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும்.

கரோனா நோய் பரவல் தடுப்புப் பணியில் முன்கள பணியாளா்களாக 24 மணி நேர சேவையில் காவல்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா பொது முடக்க விதிமீறல்கள் நடைபெற்றால் 04328-224910, 9598100690 ஆகிய எண்களில் புகாா் அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com