பெரம்பலூரில் மருந்து, பால் கடைகளைத் தவிா்த்து எஞ்சிய அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. மக்களும் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினா்.
இதனால் மாவட்டம் முழுவதும் பிரதான சாலைகளில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன. பிரதான சாலைப் பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.