குன்னம் வட்டத்தில் நிலம் தொடா்பான பிரச்னைகளைத் தீா்க்க, செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 14 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது.
குன்னம் வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ரஞ்சனா, உதவி ஆய்வாளா் முகமது அபுபக்கா், வட்டாட்சியா் அனிதா ஆகியோா் அடங்கிய குழுவினா் மனுக்களைப் பெற்றனா்.
பாதிக்கப்பட்டவா்களிடமிருந்து பெறப்பட்ட 20 -இல் 14 மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது.