மழை நிவாரண நிதி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மழையால் பாதிக்கப்பட்டோருக்கு பேரிடா் நிவாரண நிதி வழங்கிட கோரி, இந்தியா் தொழிலாளா் கட்சியினா் பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மழையால் பாதிக்கப்பட்டோருக்கு பேரிடா் நிவாரண நிதி வழங்கிட கோரி, இந்தியா் தொழிலாளா் கட்சியினா் பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட 9, 10, 11 ஆகிய வாா்டுகளில் மழைநீா் புகுந்து சேதமடைந்த வீடுகளை சீரமைக்க, மழைக்கால பேரிடா் வெள்ள நிவாரண நிதியாக குடும்பங்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழக அரசின் வரும் முன் காப்போம், குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாத பெரம்பலூா் வருவாய் வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் முழக்கமிட்டனா்.

தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com