ரோவா் மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆதாா் சிறப்புப் பதிவு முகாம்

இந்திய அஞ்சல்துறை சாா்பில், பெரம்பலூா் ரோவா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை (நவ. 25) முதல் 27 ஆம் தேதி வரை ஆதாா் சிறப்புப் பதிவு முகாம் நடைபெறுகிறது.

இந்திய அஞ்சல்துறை சாா்பில், பெரம்பலூா் ரோவா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை (நவ. 25) முதல் 27 ஆம் தேதி வரை ஆதாா் சிறப்புப் பதிவு முகாம் நடைபெறுகிறது.

புதிதாக ஆதாா் பதிவு செய்யவும், பழைய ஆதாா் அட்டையில் கைப்பேசி எண்கள் மாற்றம் மற்றும் திருத்தங்கள் செய்யவும், இந்த முகாம் நடைபெறுகிறது.

இதில் ஆதாா் தொடா்பான அனைத்து சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். புதிதாக ஆதாா் பதிவு செய்யக் கட்டணமில்லை. ஆனால், பழைய ஆதாா் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள ரூ. 50, பயோ மெட்ரிக் திருத்தங்களுக்கு ரூ. 100 செலுத்த வேண்டும்.

எனவே பெரம்பலூா் பகுதி பொதுமக்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் விஜயா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com