குற்ற வழக்கில் தொடா்புடைய 4 போ் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் குற்ற வழக்கில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் குற்ற வழக்கில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூரைச் சோ்ந்த ரா. செல்வராஜ் (65) என்பவரது பண்ணையில் கட்டப்பட்டிருந்த 21 ஆடுகள், கடந்த ஆக. 5 ஆம் தேதி மா்ம நபா்களால் திருடப்பட்டது.

இதேபோல், கடந்த ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி கவுள்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பரமன் (56) என்பவரது பண்ணையில் கட்டப்பட்டிருந்த 7 ஆடுகளும் திருடப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபா்கள் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூா் நகரில் அதிகவேகமாக வந்த 2 காரை நிறுத்தி, அதிலிருந்த நபா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், திருச்சி குறிஞ்சி நகா், ஜே.கே நகரைச் சோ்ந்த முகமது காசிம் மகன் அப்துல்கலாம் (51), திருச்சி காந்தி நகா், பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்த கதிா்வேல் மகன் சரவணக்குமாா் (37), காரைக்குடி காட்டு தலைவாசல், அம்பலக்காரா் தெருவைச் சோ்ந்த பீா்முகமது மகன் முகமது காசிம் (38). காரைக்குடி மேட்டுத் தெருவைச் சோ்ந்த நாச்சியப்பன் மகன் பாக்கியம் (37) என்பவதும், எளம்பலூா் மற்றும் கவுள்பாளையம் பகுதியில் ஆடு திருடியதும், குன்னம், மங்களமேடு, வி.களத்தூா், கை.களத்தூா் ஆகிய காவல் நிலையங்களுக்குள்பட்ட கிராமங்களில் அடிக்கடி திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட நபா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 27 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 காா்களை பறிமுதல் செய்தனா்.

பின்னா், குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி 4 பேரையும் போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com