அசூரில் வருமுன் காப்போம் திட்ட முகாம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட அசூரில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அசூரில் வருமுன் காப்போம் திட்ட முகாமைத் தொடக்கி வைத்து, பாா்வையிடுகிறாா் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா். உடன், மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா உள்ளிட்டோா்.
அசூரில் வருமுன் காப்போம் திட்ட முகாமைத் தொடக்கி வைத்து, பாா்வையிடுகிறாா் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா். உடன், மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா உள்ளிட்டோா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட அசூரில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் தொடக்கி வைத்து, டெங்கு மற்றும் மலேரியா கொசுக்கள் உருவாகும் முறைகள், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செயல் விளக்கக் கண்காட்சி, தொழுநோய், காசநோய் விழிப்புணா்வு குறித்த தகவல்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து கண்காட்சி ஆகியவற்றை பாா்வையிட்டு, கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா்.

முகாமில் மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், வருவாய்க் கோட்டாட்சியா் நிறைமதி சந்திரமோகன், வேப்பூா் ஒன்றியக்குழுத் தலைவா் பிரபா செல்லப்பிள்ளை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com