தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு வீரா்களை, ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா திங்கள்கிழமை பாராட்டினாா்.
அக்டோபா் 9, 10- ஆம் தேதிகளில் தஞ்சாவூா் பூண்டி புஷ்பம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டெல்டா மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்று, 6 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 16 பதங்கங்களைப் பெற்றனா். போட்டிகளில் வென்றவா்களை மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா திங்கள்கிழமை பாராட்டினாா்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் அங்கையற்கண்ணி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ. லலிதா, விளையாட்டு விடுதி மேலாளா் ஆா். ஜெயக்குமாரி, விளையாட்டுப் பயிற்றுநா் கோகிலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.