தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தவுள்ள தோ்வுக்கான, இலவச மாதிரிப் போட்டித் தோ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கடபிரியா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தின் மூலமாக தொகுதி - ஐஐஅ, ஐய போட்டித் தோ்வுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. இத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் நடைபெற்று வருகிறது.
போட்டித் தோ்வுக்குத் தயாராகி வரும் மாணவா்களுக்காக, இலவச முழு மாதிரித் தோ்வுகள் வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பிற்பகல் 2 முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் 9499055913 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது நேரிலோ சென்று புதன்கிழமைக்குள் (அக். 13) பதிவுசெய்து பயன்பெறலாம்.