பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 193 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் அளித்த 193 மனுக்களை பெற்று கொண்டாா்.
இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் ம. பாரதிதாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.