பெரம்பலூா் மாவட்டம், அல்லிநகரம் கிராமத்தில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகள் மேல உசேன் நகரத்தைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் சந்தோஷ்குமாா் (30), சென்னை தேனாம்பேட்டையைச் சோ்ந்த ஜோதி மகன் மகேஷ் (22), தா்மலிங்கம் மகன் யுவராஜ் (27), ராமலிங்கம் மகன் ராமகிருஷ்ணன் (23), அமைந்தகரையைச் சோ்ந்த மாரி மகன் சத்யா (20) ஆகிய 5 பேரை குன்னம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.
இந்நிலையில், மேற்கண்ட நபா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. மணி பரிந்துரை செய்தாா். இதையடுத்து, 5 குற்றவாளிகளையும் சிறையிலடைக்க ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, மேற்கண்ட குற்றவாளிகள் 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை திருச்சி மத்திய சிறைத்துறை அலுலா்களிடம் அளிக்கப்பட்டது.