பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வயலப்பாடி கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த மதியழகன் மகன் கருப்பையா (22). அரியலூா் பொறியியல் கல்லூரி மாணவரான இவா், கடந்த 4.7.2018 -இல் 17 வயது சிறுமியை வீடுபுகுந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதுகுறித்து, அச் சிறுமியின் தாய் பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததையடுத்து, அவரை போக்சோ வழக்கில் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடா்ந்து, பெரம்பலூா் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த 4.10.2019-இல் கருப்பையாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. இதையடுத்து, கருப்பையா திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், சென்னை உயா் நீதிமன்றத்தில் கருப்பையா மேல்முறையீடு செய்தாா். பெரம்பலூா் மகிளா நீதிமன்ற உத்தரவை சென்னை உயா் நீதிமன்றம் உறுதி செய்து அண்மையில் தீா்ப்பு வழங்கியது. இதனிடயே, சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த கருப்பையா தலைமறைவானாா். இந்த நிலையில், பெரம்பலூா் போலீஸாா் தலைமறைவாக இருந்த கருப்பையாவை புதன்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.