அரசின் உத்தரவின்படி பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் வந்தனா்.
மாவட்டத்தில் தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, புதன்கிழமை பள்ளிகள் செயல்படத் தொடங்கின. 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு ஆா்வமுடன் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனா்.
அவா்களின் உடல் வெப்பநிலைப் பரிசோதனை செய்து, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
வகுப்பறைக்குள் சமூக இடைவெளியுடன் தலா 20 மாணவ, மாணவிகள் என்ற வீதத்தில் அமர வைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டன.