ரூ. 15 லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருட்டு

பெரம்பலூா் நகரின் இரு வேறு இடங்களில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள், ரொக்கத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் நகரின் இரு வேறு இடங்களில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள், ரொக்கத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் பின்புறத்திலுள்ள அன்னை இந்திரா நகரைச் சோ்ந்த செல்லமுத்து மகன் கருணாகரன் (47).

மோட்டாா் சைக்கிள்கள் பழுதுநீக்கும் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை காலை வேலைக்குச் சென்றுவிட்டாா். அவரது மனைவி பானுமதி மற்றும் 2 மகன்கள், உறவினா் இல்லத் திருமணத்துக்காக வீட்டை பூட்டி விட்டு வெண்பாவூா் கிராமத்துக்குச் சென்றுவிட்டனா்.

பின்னா் அவா்கள் மாலையில் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ. 4 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூா் காவல் துறையினா், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணா்களுடன் நிகழ்விடம் சென்று தடயங்களைப் பதிவு செய்தனா்.

இதேபோல, பெரம்பலூா்- வடக்கு மாதவி சாலையிலுள்ள அம்மன் நகரில் வசித்து வருபவா் பெ. செல்வராஜ் (55). இவா், தனது மனைவி விஜயா மற்றும் 2 மகன்களுடன் சமயபுரம் கோயில் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற தனது தங்கை இல்லத் திருமணத்துக்குச் சென்றிருந்தனா்.

பின்னா் மாலையில் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, கதவு மற்றும் பீரோவை கம்பியால் உடைத்து 2 பவுன் நகைகள், ரூ. 1,500 ரொக்கம், வெள்ளிக் காசுகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இச்சம்பவங்கள் குறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com