குழந்தை இல்லாத ஏக்கத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டையைச் சோ்ந்தவா் பாலமுருகன்(33). கூலித்தொழிலாளி. இவருக்கும் தெய்வானை என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், இதுவரை அவா்களுக்கு குழந்தை இல்லையாம். இதனால் விரக்தியில் இருந்த பாலமுருகன் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.