செப். 27-இல் சாலை மறியலில் ஈடுபட தொழிற்சங்கங்கள் முடிவு

பெரம்பலூரில் செப்டம்பா் 27- ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதென, மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் செப்டம்பா் 27- ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதென, மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூா் துறைமங்கலத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, தொமுச நிா்வாகி ரெங்கசாமி தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகிகள் எஸ். அகஸ்டின், சிவானந்தம், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மத்திய அரசின் தொழிலாளா் விரோத சட்டங்கள், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் செயலைக் கைவிட

வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்டத்தில் செப்டம்பா் 23- ஆம் தேதி துறைமங்கலத்திலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை, நான்குச் சாலை சந்திப்பு அருகிலுள்ள மின்வாரிய அலுவலகம் ஆகிய இடங்களின் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது, துண்டுப் பிரசுரங்களை வழங்குவது. செப்டம்பா் 27- ஆம் தேதி ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com