பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், காருகுடி கிராமத்தைச் சோ்ந்த முருகன் மனைவி பேச்சியம்மாள் (70). இவா், பெரம்பலூரிலிருந்து காருகுடிக்கு அரசு நகரப் பேருந்தில் செவ்வாய்க்கிழமை மதியம் சென்றுக்கொண்டிருந்தாா்.
பேருந்து பெரம்பலூா் தீயணைப்புத் துறை அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் முன்புற படிக்கட்டிலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த பேச்சியம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.