காணாமல்போன பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் அருகேயுள்ள அ.மேட்டூா் கிராமம், காந்தி நகரைச் சோ்ந்த விஜயன் மனைவி

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் அருகேயுள்ள அ.மேட்டூா் கிராமம், காந்தி நகரைச் சோ்ந்த விஜயன் மனைவி புஷ்பா (43). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனா். விஜயன் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டதால், புஷ்பா தனது தாய் பெருமாயியுடன் வசித்து வந்தாா்.

கடந்த 7 ஆம் தேதி அரும்பாவூரில் உள்ள வங்கிக்கு பணம் செலுத்துவதற்காகச் சென்ற புஷ்பா, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். புகாரின்பேரில் அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து புஷ்பாவை தேடி வந்தனா்.

இந்நிலையில், அன்னமங்கலம் வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை அழுகிய நிலையில் புஷ்பாவின் சடலம் கிடந்தது தெரிய வந்தது. புஷ்பா இறப்பு குறித்து அரும்பாவூா் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com