வேப்பந்தட்டையில் 150 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேப்பந்தட்டையில் உள்ள தனியாா் திருமண அரங்கில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரம்பலூா் எம்எல்ஏ எம். பிரபாகரன், 150 கா்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை தொடக்கி வைத்து சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா்.

தொடா்ந்து, ஊட்டச்சத்து விழிப்புணா்வு கண்காட்சி நடைபெற்றது. விழாவில், கா்ப்பிணிகளுக்கு கா்ப்ப கால பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து தொடா்பான கையேடுகள் மற்றும் 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டன.

இதில், வாலிகண்டபுரம் வட்டார மருத்துவ அலுவலா் பிரேம்குமாா், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட வட்டார அலுவலா் அருணா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

நிறைவாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் புவனேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com