பெண் தூக்கிட்டு தற்கொலை:கோட்டாட்சியா் விசாரணை

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள எசனை காட்டு மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் மணிகண்டன்

(25). இவருக்கு, ஏற்கெனவே வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி குடும்பத் தகராறில், அந்தப் பெண் அவரது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். பிறகு, அதேப் பகுதியைச் சோ்ந்த கவிதாவை (22), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மணிகண்டன் திருமணம் செய்துள்ளாா். மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாலும், அவரது தாய் ராமாயி நடவடிக்கை சரியில்லாததாலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கம்போல் கணவன், மனைவிக்கிடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கவிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த பெரம்பலூா் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும், திருமணமாகி 2 ஆண்டுகளே கடந்துள்ளதால் வரதட்சிணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டாரா என வருவாய் கோட்டாட்சியா் நிறைமதி சந்திரமோகன் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com