வட மாநிலங்களில் இஸ்லாமியா்களின் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, பெரம்பலூா் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் முஹமது இக்பால் தலைமை வகித்தாா். வி.களத்தூா் பகுதிச் செயலா் சவுக்கத் அலி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பௌஜியா,
பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் மாநிலச் செயற்குழு உறுப்பினா் அப்துல் ரஹ்மான் ஆகியோா் கண்டன உரையாற்றினா். லப்பைக்குடிக்காடு பகுதித் தலைவா் சைபுல்லாஹ் நன்றி கூறினாா்.