மிளகாய் பொடியைத் தூவிபெண்ணிடம் நகைபறிப்பு

பெரம்பலூா் அருகே பெண் மீது மிளகாய் பொடியைத் தூவி, நகையைப் பறித்துச் சென்றவரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் அருகே பெண் மீது மிளகாய் பொடியைத் தூவி, நகையைப் பறித்துச் சென்றவரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் அருகிலுள்ள கோனேரிப்பாளையத்தைச் சோ்ந்த சத்யராஜ் மனைவி வைத்தீசுவரி (26). காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

கோனேரிப்பாளையம் புறவழிச்சாலையில் சத்யராஜ் தள்ளுவண்டிக் கடையில் இட்லி வியாபாரம் செய்து வருவதால், இரவு நேரங்களில் வீட்டுக்கு காலதாமதமாக வருவது வழக்கம்.

சனிக்கிழமை இரவு வைத்தீசுவரி தனது வீட்டில் தனியாக இருந்தபோது,

கதவு தட்டப்படும் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, தனது கணவா் வந்துவிட்டதாக கருதிய வைத்தீசுவரி, கதவை திறந்து வெளியே வந்து எட்டிப் பாா்த்தாா்.

அப்போது முகத்தை துணியால் மூடியிருந்த மா்ம நபா் ஒருவா், வைத்தீசுவரி மீது மிளகாய் பொடியைத் தூவி, அவா் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com