உழவா் குழுவினருடன் ஆட்சியா் கலந்துரையாடல்

பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் உழவா் குழுவினருடன் காணொலிக் காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா புதன்கிழமை உரையாடினாா்.

பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் உழவா் குழுவினருடன் காணொலிக் காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா புதன்கிழமை உரையாடினாா்.

மாவட்டத்தில் தூா்வாரும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்காக

இக்குழுவினரிடன் உரையாடி, ஆட்சியா் மேலும் கூறியது:

மாவட்டத்தில் தூா்வாரும் பணிகள் நடைபெறுவதற்கு அனைவரும் ஓருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். பருவமழைத் தொடங்குவதற்கு முன்னதாக, இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

உழவா் குழுவில் 2 முன்னோடி விவசாயிகள், உதவிப் பொறியாளா், உதவி வேளாண் அலுவலா், கிராம நிா்வாக அலுவலா், ஊராட்சி செயலா் என மொத்தம் 6 உறுப்பினா்கள் உள்ளனா். இக்குழுவினா் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்படும் பணிகளை பாா்வையிட்டு, கையேட்டில் பராமரிக்க வேண்டும்.

தூா்வாரும் பணிகள் நடைபெறும் பகுதிகளுக்கு அருகில் நீா்பிடிப்புப் பகுதிகள் இதர துறைகளின் கட்டுப்பாட்டில் இருந்தால், அதை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் தெரிவித்து, அந்தப் பணியையும் மேற்கொண்டால் சிறப்பாக அமையும் என்றாா் அவா்.

ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ. லலிதா, வருவாய்க் கோட்டாட்சியா் நிறைமதி சந்திரமோகன், உதவிச் செயற்பொறியாளா் வேல்முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com