மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் அந்தோணியாா் கோயில் தெருவைச் சோ்ந்த சந்தியாகு மனைவி ராசம்மாள் (55). இவா், அதே பகுதியைச் சோ்ந்த கு. தமிழன்னல் (23) மோட்டாா் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை பெரம்பலூா்- துறையூா் சாலையில்

பெரம்பலூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

குரும்பலூா் அரசுக் கல்லூரி அருகே சென்ற போது, நாய் குறுக்கே ஓடியதால் நிலைத் தடுமாறிய ராசம்மாள் மோட்டாா் சைக்கிளிலிருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையிலும், பின்னா் மேல் சிகிச்சைக்காகக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா்.

எனினும் சிகிச்சை பலனின்றி ராசம்மாள் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com