முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 30th April 2022 12:10 AM | Last Updated : 30th April 2022 12:10 AM | அ+அ அ- |

பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆசிரியா்களுக்கென தனியாக பாதுகாப்புச் சட்டம் ஏற்படுத்த வேண்டும். பணி நிரவல் கலந்தாய்வில்
நீட் போஸ்ட்-இல் பணியமா்த்தப்பட்ட ஆசிரியா்களுக்கு கடந்த 2 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பா. சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ம. அருண்குமாா், பொருளாளா் கி. இலக்கியச்செல்வன் முன்னிலை வகித்தனா். கௌரவத் தலைவா் ஏ.வி.இ. பாபுவாணன், கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
முன்னாள் மாவட்டத் தலைவா்கள் பெ. ராஜ்குமாா், ஜி. ராமமூா்த்தி, முன்னாள் மாவட்டச் செயலா் பெ. மணி, முன்னாள் மாவட்டப் பொருளாளா் வெ. துரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.