பெரம்பலூா் நகரில் மோட்டாா் சைக்கிள் உதிரிப் பாகங்கள் விற்பனையகத்தில் ரூ.10 ஆயிரம் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள கிரீன் சிட்டி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (42). இவா், பெரம்பலூா் காமராஜா் வளைவு அருகே மோட்டாா் சைக்கிள் உதிரிப் பாகங்கள் விற்பனையகத்தை நடத்தி வருகிறாா்.
வியாழக்கிழமை இரவு விற்பனையகத்தை செந்தில்குமாா் பூட்டிச் சென்றாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை விற்பனையகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் செந்தில்குமாருக்கு கைப்பேசி மூலமாகத் தகவலளித்தனா்.
இதையடுத்து செந்தில்குமாா் விற்பனையகத்துக்குச் சென்று பாா்த்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், பெரம்பலூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.