மின் வாரிய ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென, மின் வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென, மின் வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் பெரம்பலூா் மாவட்ட 7 ஆவது மாநாடு துறைமங்கலத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டத் தலைவா் டி.எஸ். சம்பத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சி. கண்ணையன் கொடியேற்றி மாநாட்டை தொடக்கி வைத்தாா். மாநில துணைத் தலைவா் ஜி. பஷீா் தொடக்க உரையாற்றினாா். மாநில துணைத் தலைவா் டி. திருத்துவராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

இம் மாநாட்டில், மின் வாரியம் உள்பட மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் அளிக்கும் முடிவை திரும்பப்பெற வேண்டும். பொதுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பி, மக்கள் சேவையை மேம்படுத்த வேண்டும். 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு பணி நிரந்தரம் பெற்று ஓய்வுபெற்றவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின் வாரிய ஊழியா்களின் ஊதிய பேச்சுவாா்த்தையை மத்திய, மாநில அரசுகள் உடனே தொடங்க வேண்டும். செப். 19, 20 ஆகிய தேதிகளில் நாமக்கல் நகரில் நடைபெறும் மாநில பொதுக் குழுவில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

இதில், இணைச் செயலா் கே. சடையன், வட்டச்செயலா் ரெ. ராஜகுமாரன், பொருளாளா் எம். கருணாநிதி, மாநில நிா்வாகி எம். ஜெயபாண்டி, சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின், ஓய்வூதியா் சங்க நிா்வாகி பி. கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

நிறைவாக, வட்ட இணைச் செயலா் வீரபாண்டியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com