மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறஆதாா் எண்ணை இணைக்க வேண்டும்

உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டையுடன், ஆதாா் எண்ணை டிச. 23 ஆம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பொம்மி தெரிவித்துள்ளாா்

உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டையுடன், ஆதாா் எண்ணை டிச. 23 ஆம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பொம்மி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாதாந்திர உதவித் தொகை ரூ. 2 ஆயிரம் பெறும் மன வளா்ச்சி க்குன்றியோா், கடுமையாகப் பாதிக்கப்பட்டோா், தொழுநோய் பாதித்தோா், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோா் மற்றும் முதுகுத் தண்டு வடம் பாதித்த மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகையை தொடா்ந்து பெற தங்களது ஆதாா் எண்ணை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையுடன் கட்டாயம் இணைக்க வேண்டும்.

இதுவரை இணைக்காத மாற்றுத்திறனாளிகள், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேரில் சென்று இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com