உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 1.50 லட்சம் பறிமுதல்

பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.50 லட்சம் ரொ

பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.50 லட்சம் ரொக்கத்தை, தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாவட்ட முத்திரைத்தாள் பிரிவு தனி வட்டாட்சியா் பழனிச்செல்வன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படை குழுவினா், பெரம்பலூா் அருகிலுள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், காடூா் கிராமத்தைச் சோ்ந்த படைக்காத்து மகன் நல்லதம்பி (45), உரிய ஆவணங்களின்றி ரூ. 1.50 லட்சத்தை காரில் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா்,அதை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com