பதற்றமான வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பெரம்பலூா் நகராட்சியில் 21 வாா்டு உறுப்பினா்கள் மற்றும் குரும்பலூா், அரும்பாவூா், பூலாம்பாடி, லப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வாா்டு உறுப்பினா்கள் வீதம் 60 உறுப்பினா்கள் என மொத்தம் 81 வாா்டு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான உள்ளாட்சித் தோ்தல் வரும் 19 -ஆம் தேதி நடைபெறுகிறது.

இத்தோ்தலில் 41,163 ஆண் வாக்காளா்களும், 44 ,002 பெண் வாக்காளா்களும், 11 இதர வாக்காளா்களும் என மொத்தம் 85 ,176 போ் வாக்களிக்க உள்ளனா். இதற்காக, பெரம்பலூா் நகராட்சியில் 50 வாக்குச்சாவடிகளும், 4 பேரூராட்சிகளில் மொத்தம் 62 வாக்குச்சாவடிகளும் என மாவட்டத்தில் 112 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் பெரம்பலூரில் 7 , அரும்பாவூா் பேரூராட்சியில் 2 , பூலாம்பாடி பேரூராட்சியில் 2

என மொத்தமாக 11 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.

இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு பாதுகாப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. மேற்கண்ட வாக்குச்சாவடி பகுதியைச் சோ்ந்த வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com